காதல் வந்தால்....





Tell me you love me

I hope I hear it

While I'm alive

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

உயிரோடிருந்தால் வருகிறேன்

என் கண்ணீர் வழியே.. உயிரும் வழிய

கரையில் கரைந்து கிடக்கிறேன்

சுட்ட மண்ணிலே மீனாக

மனம் வெட்டவெளியிலே வாடுதடி

கண்ணீர் கலந்து கண்ணீர் கலந்து

கடல் நீர் மட்டம் கூடுதடி..

உயிரைத் தவிர சொந்தம் இல்லையே

காதலிக்கும் முன்பு

இந்த உலகே எந்தன் சொந்தமானதே

காதல் வந்த பின்பு

Babe.. Tell me you love me

It's never late.. Dont hesistate

சாவை அழைத்து கடிதம் போட்டேன்

காதலிக்கும் முன்பு

ஒரு சாவை புதைக்க சக்தி கேட்கிறேன்

காதல் வந்த பின்பு

உன்னால் என் கடலலை

உறங்கவே இல்லை

உன்னால் என் நிலவுக்கு

உடல் நலமில்லை

கடல் துயில் கொள்வதும்

நிலா குணம் கொள்வதும்

நான் உயிர் வாழ்வதும்

உன் சொல்லில் உள்ளதடி..

உன் இறுக்கம்தான்

என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி

என் கண்ணீர்..

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்

உன்னை காணும் முன்பு

நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்

உன்னைக் கண்ட பின்பு

அன்னை தந்தை கண்டதில்லை நான்

கண் திறந்த பின்பு

என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்

உன்னை கண்ட பின்பு

பெண்ணே என் பயணமோ

தொடங்கவே இல்லை

அதற்குள் அது முடிவதா

விளங்கவே இல்லை

நான் கரையாவதும்

இல்லை நுரையாவதும்

வளர் பிறையாவதும்

உன் சொல்லில் உள்ளதடி

உன் இறுக்கம்தான்

என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..

(காதல்..)

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு













































































































































Babe.. Tell me you love me

It's never late.. Dont hesitates

பிறந்த மண்ணை அள்ளி தின்றேன்

உன்னை காணும் முன்பு

நீ நடந்த மண்ணை அள்ளித் தின்றேன்

உன்னைக் கண்ட பின்பு

அன்னை தந்தை கண்டதில்லை நான்

கண் திறந்த பின்பு

என் அத்தனை உறவும் மொத்தம் கண்டேன்

உன்னை கண்ட பின்பு

பெண்ணே என் பயணமோ

தொடங்கவே இல்லை

அதற்குள் அது முடிவதா

விளங்கவே இல்லை

நான் கரையாவதும்

இல்லை நுரையாவதும்

வளர் பிறையாவதும்

உன் சொல்லில் உள்ளதடி

உன் இறுக்கம்தான்

என்னுயிரை கொல்லுதடி கொல்லுதடி..

(காதல்..)

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

காதல் வந்தால் சொல்லி அனுப்பு

சொல்லி அனுப்பு சொல்லி அனுப்பு

Related Posts with Thumbnails