உன் பார்வையில் ...












உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்

மயங்கினேன்..

ஒரு ஞாபக அலை என வந்து

என் நெஞ்சினை நனைத்தவள் நீயே

என் வாலிப திமிரினை உன்னால் மாற்றினேன்

வருகிறாளே என் தேவதைதான்

புது வசந்தம் கொடுத்தாளே..

பார்க்கிறாளே என் பௌர்ணமிதான்

இந்த மனதை பறித்தாளே..

ஒரு போதி மரத்தை உன் கண்களிலே

கண்டு தியானம் செய்ய அமர்ந்தேன்

ஒரு பாதி உயிரை உன் காலடியில்

தந்து பாதியாகி நடந்தேன்

இதயத்துக்கு தலை சுற்றுதே

இமைகளுக்கு விழி சுட்டதே

அமைதிக்கு தடை விதித்தாய்

அஹிம்சையில் உயிர் பறித்தாய்.




























உன் பார்வையில் பைத்தியம் ஆனேன்

உன் வார்த்தையில் பாக்கியம் ஆனேன்

உன் வெட்கத்தை வேடிக்கை பார்த்தேன்

மயங்கினேன்.

No comments:

Post a Comment

Related Posts with Thumbnails